(தமிழர்கள் நம்பும் பல கருத்துகளுக்கு
ஆரியர் கொண்டுள்ள உண்மையான கருத்து)
கோயில்
கோவென மக்களை வெளியே அழ வைத்து வாழ்வதற்காக ஆரியர் தமிழரைக்
கொண்டே கட்டிவைத்துக் கொண்ட இல்லங்கள்.
கும்பாபிஷேகம்
கும்பம்= வயது, அபிஷேகம்= ... செய்வது, ஆரியர் வயறு குளிர...
வாழ்,ஓர் வழி.
அர்ச்சனை...
ஹர்- சேனை என்பதன் மருஉ. ஹர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரின்
சேனை போல், தமிழரைக் கொள்ளையடிக்க உபயோகமாகும் தந்திரம்.
திராவிட மக்களின் செல்வத்தை வாழ்வையும் இந்த நாட்டிலே
கரைக்க உபயோகித்த ஆயுதம். இன்று கொஞ்சம் கூர் மழுங்கிக்
கிடக்கிறது.
அரன்.
அரம் என்பதன் திரிபு. தமிழர் வாழ்வைத் துண்டு துண்டாக்க
உபயோகிக்கப்பட்ட அரம்= ஒரு ஆயுதம்.
கௌபீனம்.
தமிழருக்கு, அவர்கள் பட்டு பீதாம்பரம். பவுன்புட்டா சேலை
முதலிய ஆடைவகைகள் செய்யும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும்,
யார் என்ன அணிய வேண்டும் என்பதைக் குறிக்கும் பதம். லகரம்,
னகரமாகி விட்டது. தமிழர்களுக்கு விஷயம் தெரியாமலிருக்க.
வினாயகன்
வினா- அகன், என்பதன் கூட்டுச் சொல். ஏன் இப்படி எங்களைத்
துரத்தினீர் என்ற வினா தமிழர்களுக்கு தோன்றினாலும், அதை
மனத்திற்குள்ளேயே முடங்கும்படி செய்வதற் காக ஏற்பட்ட கற்பனைத்
தேவன், வினா அகன், என்பதை வினாயகன் என்று தொகுத்துத்
தமிழருக்குத் தந்தோம்.
ராவணன்
ரா+வண்ணன், ராவணன் என்றாயிற்று, ரா= இரவு, வண்ணன்= நிறமுடையவன்,
அதாவது கரிய மேனியன், தமிழன்.
இதிகாசம்
இது, காசம், என்பது தமிழருக்குத் தெரியாதிருக்கும் பொருட்டு,
இதிகாசம் என்று கூறப்பட்டது. இது= இந்தக் கதை, காசம்=
கேட்டு நம்பினவருக்குக் கருத்து, காசநோய்க்காரரின் உடல்
கெடுவது போல் கெட்டு விடும் என்பது புதைந்துள்ள பொருள்.
வேதம்
பேதம், என்பதையே, வேதம் என்று விளம்பினோம். நாட்டிலே
பேதம் இருக்கவே, இந்த வேதம் பயன்படுவிதிலிருந்து, இந்த
இரகசியம் விளங்கும்.
வைகுண்டம்
வை! முண்டம்! என்பதைத் திரித்து எழுதினோம். எம்மிடம்,
ஏமாறும் முண்டமே! வை, காசு பணம் என்று நம்மவர், திதி முதலிய
காரியங்களின் போது தமிழரைக் கேட்க, வை குண்டம் என்ற இரகசிய
கோட் (ஊடினந) உபயோகிக்கிறோம்.
கைலாயம்
தானை முன், என்பது முந்தானை என்று ஆயிற்று, தானை சேலை,
முன்= முன்னால் இருக்கும் பாகம். அதுபோலவே லாயம் கை,
என்பது கைலாயம் என்றாயிற்று. லாயம்= ஆரியருக்குச் செக்குமாடுகளாக
உள்ள ஏமாளி களை அடைத்து வைத்திருக்கும் பட்டி, கை= நம்முடைய
கையில் இருக்கிறது என்று, நம்மவர், தமிழரின் சடங்குகளிலே
சொல்லுகிறோம். இதுவும் இரகசிய கோட் (ஊடினந) தேசிய சர்க்கார்
எங்ஙனம் அமைப்பது, இங்கு மூன்று தேசங்கள் உள்ளனவே என்றுரைத்தாலோ,
முப்புரிகள் முணு முணுக்கின்றன. பின்னர் எப்படித் தேசீய
சர்க்கார் அமைப்பது! இதுசமயம் தேவை, தேசீய சர்க்காரால்ல,
இன்று தேசீயம் என்பது, ஓர் கதம்பக் குழம்பாக இருக்கிறது.
நாட்டுப் பிரிவினைக்குப் பிறகே, தெளிவான தேசீயம் தோன்ற
முடியும்! இன்று அவசியமானது, போரைத் திறம்பட, வெற்றிகரமகா
நடத்தித் தரக்கூடிய, பலமான சர்க்கார்- அதைப் பரிபூரண மாக
ஆதரிக்கும் மக்கள்- அம்மக்களைக் சரியான வழியிலே நடத்திச்
செல்லும் தலைவர்கள்- இவையே! இவைகட்குக் குறுக்கே நிற்பது,
ஆச்சாரியார்ர் போன்றோர், அடிக்கடி விடும் அறிக்கைகள்,
சில சீமை மகாத்மாக்கள் விடும் யோசனைகள், பேட்டிகள் ஆகிய
நிகழ்ச்கிகளே என்போம்.
தேசீய சர்க்கார் தேவை, தேவை என்று இன்று கூறும், ஆச்சாரியார்,
அதை அமைக்க, அவருக்கு இருந்த அருமையான சந்தர்ப்பங் களைத்
தவற விட்டுவிட்டார் என்பதை, தர்க்கத் துக்காக அவர் மறுக்கலாமே
தவிர, மனதார மறுக்க முடியாது!! போர் துவங்கிய உடனே, பிரிட்டனுடன்
பேரம் பேசும் காரியத்திலே இறங்காது, பிணக்கு தீர, இங்குள்ள
கட்சிகளைக் கலந்து சமரசம் உண்டாக்கியிருந்திருப்பின்,
இன்று ஆச்சாரியார் கோரும் சர்க்கார் இருந்திருக்கும்!
அன்று அவரது ஆசை, வாலியை வீழ்த்த வேண்டும் என்பதன்றி வேறில்லை,
இன்று விம்மிடுவது வீண் என்போம். இப்போதும், மூன்றாண்டுகட்கு
முன்பு பேசியிருக்க வேண்டியதைப் பேசிக் கொண்டிருந்து
பயன் இல்லை.
இன்று, ஆச்சாரியார் ஆங்கிலேயருக்கு, வேண்டுகோளோ, எச்சரிக்கையோ
விடுவதை விட உண்மையிலேயே நாடு, ஜப்பானியரிடம் சிக்காமலிருக்க
வேண்டுமென்ற எண்ணமிருப் பின், போர்க்காலத்திலே பேரம்
பேசக்கூடாது என்று கூறிவிட்டு, களத்தை வேவல்கள் கவனிக்கட்டும்,
மக்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு,
மற்றத் தலைவர்களுடன் கலந்து பேசி, மக்களிடையே, போரில்
வெற்றிபெறுவதற்கான ஆர்வம் பிறக்கும் வேலையைச் செய்தலே,
முறை என்போம்.
கல்கத்தாவிலே ஆச்சாரியார் பேசிய போது, தமது காங்கிரஸ்
சகாக்களுக்குச் சொன் னார், ``பிரிட்டிஷ் ஆட்சியை இத்தனை
வருஷ காலம் பொறுத்துக் கொண்டோம், இனி இரண்டாண்டு பொறுத்துக்கொள்வோம்’’
என்ற அருமையான போதனை! அத்துடன் ஒன்று சேர்த்து ஆச்சாரியாருக்கு
நாம் அர்ப்பணம் செய்கிறோம், இந்த மூன்றாண்டுகளாக உமது
சகாக்கள் ஒதுங்கி இருந்தது போல், இன்னும் இரண்டாண்டு,
வெற்றி கிடைக்கும்வரை, ஒதுங்கி இருக்கட்டும், இந்தச் சமயத்திலே,
அவர்களை உள்ளே புகுத்தும் முயற்சி வேண்ண்டாம்.’’
இதனை நாம், எட்டு கோடி முஸ்லீம், நாலு கோடி திராவிடர்,
ஆறு கோடிக்கு அதிகமான ஆதிதிராவிடர் சார்பாகக் கூறுகிறோம்.
``பவதி பிஷாந்தேஹி’ என்று, சியாங்கே ஷெக்கிடமோ, ரூஸ்வெல்ட்டிடமோ
சென்று பயனில்லை என்று சீரிய புத்திமதி கூறிய டாக்டர்
அம்பேத்காரின் அறிக்கையையும், கண்டவர். காற்றாடியைப் பறக்க
விடும் கபடம் வேண்டாம் என்று ஜனாப்ஜின்னா விடுத்த எச்சரிக்கையையும்,
கவனப்படுத்துகிறோம்.
- திராவிட நாடு, 8-11-1942
|