எழும்பூரில்
இரவு 9.40 க்குப் புறப்படும் வண்டியில் புறப்படவும், அந்த
வண்டி கும்பபோணத்துக்குக் காலையில் 7 மணிக்கு வருகிறது நான்
இரயிலுக்கு வந்திருக்கிறேன். இரயில் தவறிவிடப்போகிறது 9.40க்கு
வண்டி புறப்படுகிறது. 9-க்குள் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டு
விடுங்கள். அன்பர், குடந்தை கே.கே.நீலமேகம் இதுபோன்று பல
கடிதங்கள் எழுதியிருப்பார் எனக்கு கடிதத்தைப் படிக்கும்போது
முதலிலே எனக்குச் சிரிப்பும், பிறகு திகிலும் வரும். இவ்வளவு
விளக்கமாக எழும்பூரில் வண்டி றுப்படும் நேரத்தைக் கும்பகோணத்திலிருந்து
எழுதுகிறாரே என்ற சிரித்துக கொள்வேன். ஆமாம் இவ்வளவு விளக்கமாக
அவர் எழுதியும் பலமுறை இரயில் தவறியதுண்டு, வழியும் தவறியதுண்டு,
எனது வாழ்க்கை வண்டி எப்படி வளைந்த தண்டவாளங்களின் மீது
ஓடுகிறதோ அது போலமே வெரும்பாலும் எனது ஊர்ப் பிரயாணங்களும்!
இத்தகைய எனக்கு உடனே புரப்பட்டு அரித்துவாரத்தில் வந்து
என்னைச் சந்திக்கச் சொல்லுங்கள் என்று பெரியார் சண்டே அப்சர்வர்
ஆசிரியரிடம் தகவல் அனுப்பினால், டில்லியிலிருந்து கொண்டு
பம்பாயில் தோழர். எஸ். முத்தய்யா முதலியார் அவர்களின் தலைமையிற்
கூடிய நேஷனல் டிமோகிராடிக் மாநாட்டுக்குச் சென்றிருந்த பெரியாரை,
தோழர் எம்.என்.ராய், வடநாடு வேண்டுமென்று விரும்பப் பெரியார்,
அனுப்பிய அன்பழைப்பு எனக்கு அச்சத்தை உண்டாக்கிவிட்டது.
நாம் எங்கே, அரித்துவாரம் எங்கே! இரயிலில் இடம் கிடைப்பதேது?
கிடைத்தாலும் டில்லிபோய், அங்கிருந்து வேறுவண்டிபுடித்து
அரித்துவாரம் வரவேண்டுமே, அந்தக் கஷ்டம் வேறு என்று எண்ணினேன்,
மணவரைக்குப் புதுபெண்டைணத் தைரியங்கூறி அழைத்து வருகிறார்களே,
வைதிகக் கலியாணங்களிலே, அது போல் நண்பர்கள் தைரியமளித்தனர்!
சிலர் புத்தகம்! சிலர் பழம்! சிலர் வெற்றிலைபாக்கு! பலர்
தமது புன் சிரிப்பு ஆகியவைகளை அளித்தனர். வண்டி நகருமுன்பு
சென்னை சென்ட்ரலில் தோழர் எஸ்.குருசாமி, மூன்ற சாத்துக்குடிகள்
தந்தார்! அவற்றை வண்டியில் சாமான் வைக்கும் இடத்திலே வைக்க
எழுந்தேன், ஏற்கனேவே காலை ஓரணவு நீட்டிப் படுத்துக்கொண்டிருந்த
இஸ்லாமிய சிப்பாய் காலை பூராவும் நீட்விட்டார். வண்டி நகர்ந்தது,
நண்பர்கள் மலர்ந்த முகத்துடன் செலவு தந்தனர், சிப்பாயின்
காலுக்கும், மறுபக்கத்துப பிரயாணி வைத்திருந்த பெட்டிக்கும்
இடையே கிடைத்த சிறு இடத்தில், உட்கார்ந்தேன். இது இண்டர்கிளாஸ்
வண்டியின் இலட்சணம்! வண்டி செல்லச்செல்ல சிப்பாயின் நீட்டிய
கால்கள் இடங்க ஆரம்பித்தன. சில ஸ்டேஷனுக்குப் பிறகு இருவருமாகச்
சாயா சாப்பிட்டோம். அவர் தமது மலய் நாட்டு அனுபவங்களை உடைந்த
ஆங்கிலத்தில் கூறினால், இருவரும் நண்பர்களானோம். டில்லிபோய்ச
சேர்ந்தேன். இடைய என்னென்ன கண்டீர்கள், ஒரே அடியாக டில்லிபோய்ச்
சேர்ந்தேன் என்று கூறிவிட்டீரே என்று தோழர்கள் கேட்பர்.
புறப்பட்டோம். போய்ச் சேர்ந்தோம், என்றிருக்கக் கூடாதா,
எவ்வளவு நேரம் இரயலில் இருப்பது மணிக்கணக்குப் பேய், நாட்கணக்கில்
வந்து விடுகிறதே, என்று சலிப்புத் தோன்றும்படி, இரயில் மூன்ற
நாட்கள் ஓடி, மனித மூட்டைகளை (ஆம்! அந்த ஸ்திதிக்குப் பெரும்பாலான
பிரயாணிகள் வந்து விடுகின்றனர்) சென்னையில் புறப்பட்டேன்
டில்லிபோய்ச் சேர்ந்தேன் என்ற இருக்கட்டும என்று எண்ணியே
இடைய நடந்த சம்பவங்கள், நினைவுகள் ஆகியவைகள் எற்றி எழுதவில்லை.
உங்களுக்குத் தெரியாதா நீண்ட பயணத்திலே நேரிடக் கூடிய நவரசங்கள்!
டில்லியில் ஓட்டலில் தங்கினேன் - சென்னை பர்ப்பனருடையது
- டில்லி செகரடேரியட்டில் வேலையில் உள்ள பல சென்னை வாசிகள்,
(வழக்கப்படி அக்கிரகார சொரூபங்களே அதிகம்) அந்த ஓட்டலில்
வருவதும் போவதுமாக இருந்தனர். சிலர் அங்கேயே தங்கியுமிருந்தனர்.
காலையில் போனேன் டில்லிக்கு. இரவு புறப்பட்டேன் அரித்துவாரத்துக்கு
மறுதினம் காலையில் அரித்துவாரம் சேர்ந்தேன் இடையே தூங்கவில்லை.
தூங்கியிருந்தால், அரித்துவாரம் என்னை வந்தெழுப்பி, இறங்கு
என்று கூப்பிட்டா இருக்கும்! இந்த வாழ்க்கையை மாயமென்ற எண்ணி,
பிறவியைச் சுமை எனக் கருதிக் கொண்டு, எப்படியாவது விரையிலே
இறைவன் திருவடி நிழலில் இரண்டறக் கலக்கவேண்டும என்ற எண்ணிக்கொள்ளும்
இயல்புடையவர்கள், மோட்ச சாம்ராச்யத்தில் சீட் ரிசர்வ் செய்யபும்,
பாவங்களைக் கழுவவும், புண்ணியத்தைத் தேடவும், புராணிகர்கள்
கூறியுள்ளபடி பல ஷேத்திரங்களுக்குச் செல்கிறார்களல்லவா!
பரிதாபம், அவர்கள் ஏனோ வாழ்க்கையைக் கண்டு இப்படிப் பயப்படுகிறார்கள்!
மானிடப்பிறவுகள், மகத்தான எவ்வளவோ பணிகளை மக்களுக்காற்றி,
உலகைப் புன்னகைப் பூந்தோட்டமாக்க எத்தனையோ விதத்திலே உழைக்க
வேண்டியதிருக்க, காயமே, இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா
என்று கருதிக்கொண்டு கதறுகிறார்கள். செடிகொடி, மிருகங்கள்
முதலியன மானிடருக்குப் பயன்கரும் அளவுக்கு, மானிடர் மானிடருக்குப்
பயன் பட்டால், அவர்கள் தேடித்தேடி, கால்களம் நோகுதே கடும்பசி
ஆகுதே அபிஜேகம், பாராயணம் பஜனை போன்றவைகளைச் செய்கின்றனரோ,
அந்த மகேஸ்வரன், நான் பூலோகத்திலேதான் இனிவசிப்பேன், என்
கூறிவிடத்தக்க அற்புதமான நிலை, உலகில் ஏற்படும். ஆனால்,
புல்பூண்டு பயன்படும் அந்த அளவுக்குக்கூட, மனிதர், மற்ற
மனிதருக்குப் பயன்படத்தக்க முறை உலகில் இல்லை. அதுமட்டுமா?
மனிதரை மனிதர், நிந்திப்பது, கெடுப்பது, எதிர்ப்பது, அழிப்பது,
இவை நடக்கிறது இத்தகைய கேடுகளைக் களைய, தீர்த்தமாடி, திருபல்லாண்டு
பாடி திவ்ய ஷேத்திய யாத்திரைகள் செய்வதல்ல வழி. வாழ்க்கை
மாயம் என்றுரைக்கும் வறட்டுப்பேச்சு ஒழிக்கப்பட்டு, வாழ்க்கை
பலருக்குப் பாலைவனமாகவும், சிலருக்கு மட்டுமே சிங்காரத்
தோட்டமாகவும் இருக்கிறதே அந்தக் கொடுமையைப் பேக்க வேண்டும்.
அது செய்யக் கங்கையில் மூழ்கி, காசியில் தொழுது மாசிலாமணியைக்
காண்பதற்குக் கடுந்தவம் செய்வது, வழியல்ல, பக்தி, அருளைத்
தரும், செய்வோருக்கு, என்பர் மதபோதகர்கள். ஆனால் ஒரு பக்தர்
அருள்பெற்றால், அதனல் அனைத்துயிர்க்கும் அருள் கிட்டுமென்றுரைக்கவோ,
அவனியில் உள்ள சீர்கேடுகள் அழிந்துபட்டு, சாந்தமும் சுபீட்சமும
பெருகிவிடும் என்றோ கூறமுடியாது, அங்ஙனமே நடக்குமென்பதுண்மையாயின்,
சமயவாதிகள் தோற்முன்னம் தோன்றி தோடுடையசெவியனைப் பாடிய பக்திமான்கள்,
சமயவாதிகளைச் சம்ஹரித்தோம் என்று சங்கநாதம் செய்த சங்கரர்
முதலாய குருமார்கள், பலர் தோன்றி தோன்றி மறைந்தபிறகும்,
உலகிலே, கொடுமையும் கோரமும் இருக்கக் காரணமில்லை. மருந்து
பலமுறை பருகியும் நோய் தீரவில்லை என்றால், மருத்துவர் நல்லவர்,
மருந்து அபூர்வமானது என்று கூறிக்கொண்டிருத்தலால் பயன் யாது!
ஆமாம்! இதுவல்ல நான் எழுதவந்த விஷயம் இடையே வந்தது. இத்துடன்
இருக்கட்டும்.
அரித்துவாராம் திவ்ய ஷேத்திரங்களில் ஒன்று! அதைக்காண கங்கையில்
மூஷ்கி கதி நல்லதாகுக என வேண்ட பலப்பல ஆயிரம் மக்கள் ஆண்டுதோறும்
வரும் இடம் அரித்துவாரம். ஊரிலே முக்கால் பாகம் சத்திரம்
மக்களில் பாதிபேர் பண்டாக்கள். நமது தமிழகத்தார் கட்டியுள்ள
சத்திரங்களும், ஆங்குள்ள பிற நாட்டவரின் பெரும் பெரும் கோட்டை
அவர்கள் போற் மதில்கள் கொண்ட பழைய சத்திரங்களம் பல உள. காவி
உடை கமண்டலமேந்திய கரங்கள், சடைமுடிதாரிகள், பட்டை நாமங்கள்,
உடல் முழுதும் நீறு பூதியோர், உடல் முழுதும் ஊண்பொதியர்களாக
உல்லாச உபசிகள், ஆகியோரை, அரித்துவாரத்தில் சதா, காணலாம்.
அவர்கள் அவ்வளவு கம்பீரமாகவும், கவலையற்றும் கோயில் மாடுகள்
வீதிகளில் உலவும். குரங்குக் கூட்டமோ அதிகம். கொசுத் தொல்லையும்
அப்படியே, கும்பமேளாவுக்கு வரவேண்டும் இங்கு கூடும் சனங்களைக்
காணவேண்டும் என்று பெருமையோடு கூருவார்கள், அரித்துவாரவாசிகள்.
அத்தகைய அரித்துவாரத்தில் பெரியாரைத் தேடிக்கொண்டு நான்
சென்றேன். அவர் எங்கு தங்கியிருப்பதாக எனக்குத் தகவல் தரப்பட்டதோ
அந்த விலாசம் விளக்கமற்றிருந்ததால் நான் வீதி பல சுற்றினேன்.
பல சாதி மக்களைக் கண்டேன். ஒவ்வொருவரும் இப்போதோ, அடுத்த
வினாடியே இந்த உலகை விட்டு நீங்கிவிடவேண்டும் என்று திடமான
எண்ணணம் கொண்டவர்கள் போலவே, அவசர அவசரமாக கங்கைக்குப் போவதும்,
முழுகியானதும் ஆடை உலராமுன்னம் பண்டாக்களின் பாதத்தை கும்பிடுவதுமாக
இருந்தனர்.
மராட்டியத் தோழரொருவர், இடையே என்னைக் கண்டார். ஆங்கிலத்தில்
பேசி அவரிடம் ஒரு ஏற்பாட்டடுக்கு வந்தேன். முதலிலே மராட்டியச்
சத்திரத்திற்குப் போவது, சாமான்களை அங்கே வைத்துவிடுவது,
சா சாப்பிடுவது பிறது டாஸ்கா பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றுவது
விலாசதாரைக் கண்டுபிடிப்பது இது அவர் ஏற்பாடு. செலவு முதலிலே
அவர் பேச்சின்படி ஒன்றும் கிடையாது தர்ம சக்கரம், கைங்கரியம்
என்றார். முடிவிலே ஒரு முழு ரூபாய். ஆனால் அவர் தந்த சா
வை நான் இப்போது ஒன்பது முழு ரூபாக்கள் கொடுத்தாலும் கொடுத்தாலும்
பெறமுடியாது. புனாவிலிருந்து அங்கு வந்திருந்த குடும்பத்தாரிடம்,
சென்னையிலிருந்து ஒரு பக்தர் வந்திருக்கிறார். பசி, ஆகவே
சா கொடுத்தால் புண்ணியம் என்று கூறி சா வாங்கிக் கொடுத்தார்.
என்னிடம் மிகப் பழைய அந்தச் சத்திரத்தின் மேன் மாடியில்
ஒரு அறைக்கள் நின்றுகொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன்.
சத்திரத்தின் சுவரை முத்தமிட்டுக்கொண்டு கங்கை செல்கிறது.
அதைக் காப்பதுதான் கடன் என்று கருதிக்கொண்டிருப்பதுபோல்
மறுகரையில் மா, பலா முதலிய மரங்கள் அடர்ந்த சாலை. அந்தச்
சாலைக்க அரண்கள்போல், சிறுசிறு குன்றுகள். அவைகளைத் தமது
செல்லப்பிள்ளைகள் என்று கூறிக்கொண்ட நிற்பதுபோல பெரிய மலைகள்.
அந்த மலைகளை மேடையாக்கிக்கொண்டு நர்தனம் புரிவதுபோல, மேகங்கள்,
இதற்கு கீதம் போல் கங்கை பாய்வதில் ஒலி, இக்காட்சியை காணவந்த
பெண்கள் போல, மரக்கிளையில் பச்சை நிறக் கிளிகள் பஞ்சவர்ணக்கிளிகள்,
நாடக மேடையில் காலரியில் அமர்ந்து தாளமிட்டும் ஆரபரித்தும்
அட்டகாசம் செய்யும் உற்சாகத் தோழரகள் போல், குளிக்க வருபவர்கள்
மந்திரமோதியும், துணி துவைத்தும் செய்யும் சத்தம். கட்டணம்
தராததால் கொட்டகைக்கு வெளியே அமர்ந்துகொண்டு கற்களை வீசும்
குறும்பர்கள் போல குரங்கினங்கள் குதித்தும், தாவியும், கீச்சிட்டும்,
கிளைகளை முறித்தெறிந்துகொண்டும், சேட்டைகள் செய்தன. கையில்
இருந்த, சா ஆறிவிட்டது, குளிர்ந்த காற்று வீசினதால். ஆனால்
சாவின் வெப்பம் ஆறிவிட்டதைவிட விரையிலே, பியாண அலுப்பினால்
உடலிலும் உள்ளத்திலும் எனக்கிருந்த வெப்பம் தணிந்துவிட்டது.
ஆகா, மேனாடுகளில் இத்தகைய இயற்கை எழில் நிரம்பிய இடம் இருப்பின்
அது மன்னரும், மனோகரிகளும், மக்களும் குடும்பமும், நோயுற்றோரும்,
நொந்தோரும் சென்று தங்கி உடலும் உள்ளமும் ஆரோக்கியம் பெறத்தக்க,
சுக வாசஸ்தலமாக்கி சுவைப்பர். இங்கு அரித்துவாரம் மதவாதிகளிடம்
சிக்கிக்கொண்டு படாதபாடுபடுகிறது. அதை காப்பாற்ற யார் முன்
வருவார்கள்!
கங்கை, இமயத்துப் பனியுருகி, மல்லிகைப்பூ மாலைபோல் துவங்கி,
பாறைகளைப் பளிங்காக்கி மலையையும் இளகச் செய்யும் மழலை மொழி
ஓசையுடன் உலவி, வளர்ந்து வளைந்து, குழைந்து கலவி, நிலத்தை
அணுகி, செல்வவான் வீட்டுச் சிங்காரி பணியும் பட்டாடையும்
பூண்டு, பாதச் சிலம்பு கொஞ்ச நடந்து வருவதுபோல், அதித்துவாரத்தில்
வருகிறது. பிறகு கங்கை, மங்கைப்பருவம் பெற்று, தங்கு தடைங்கப்
பெற்று, தாய்ப பருவமுற்றுச் செல்கிறது வேறு பிரதேசங்களில்,
அரித்துவாரத்தில் கங்கையின் இங்கித மழலையின் இசையின்பம்
நுகரலாம், இயற்கை எழிலைக் கண்டு இன்புறுவோர்!
|