சேலம், மார்ச் 28.
அரூர் தாலுக்கா தாசரல்லி போர்டு பாடசாலையில்
வேலை செய்து வரும் தலைமை ஆசிரியர் ஏ. தீத்தான் என்பவர்
காலில் செருப்பு அணிந்து வருகிறார் என்ற காரண்ததை முன்னிட்டு
அவ்வூர் ஜாதி இந்துக்களில் சிலரால் 25-2-52 நடுப்பகல்
11 மணிக்கு பாடசாலைக்குள்ளேயே தாக்கப்பட்டாராம் இது சம்பந்தமாக
ஜில்லா போர்டு பிரசிடெண்டிற்கு ரிப்போர்டு செய்ததற்கு,
‘நீரே வழக்கை நடத்திக் கொள்ளும், எனக் கூறிவிட்டாராம்.
அவ்வூரிலிருந்து மாறுதல் கேட்டதற்கும் நிர்வாகம் மறுத்துவிட்டதாம்.
இதுபற்றி வழக்கு சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டில்
தாக்கல் செய்யப்பட்டிருந்தும் அது 19-3-52ல் தள்ளுபடி
செய்யப்பட்டு விட்டதாம்.
செய்தி
– திராவிட நாடு – 6-4-52