அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“நான் மகிழ்ச்சி ஆடைகிறேன்!”
“பாருமே! இவ்வளவு பெரிய ஞானஸ்தனாக இருந்து, கேவலம், நிரீஸ்ராவாதி போலன்னோ ஏய்விட்டான் நம்ம வ.ராமசாமி; ஐயங்கார்ன்னு கூடப் போட்டுக்கறதில்லை ஒய், அவன்!”

ஆரியர்
“தீவிரமான சுயமாரியாதைக்காரராக வன்றோ இருக்கிறார். எவ்வளவு அறிவு ஆராய்ச்சி! அஞ்சாநெஞ்சுடன் பழமையைச் சாடுகிறாரே. கலையின் பேரால் நடக்கும் கபடத்தை உடைக்கிறார்; மதத்தின் பேரால் நடக்கும் அக்ரமத்தை ஓங்கி அடிக்கிறார்; வ.ரா. பெரிய சீர்திருத்தவாதி! ஆனால், வ.ரா. யார் தெரியுமோ? ஒரு பார்ப்பனர்!!”

திராவிடர்
“வைதீகப் பிச்சுகளோ, எனக்கு வேம்பு! சுயமரியாதைக்காரர்களோ, வெடிகுண்டுகள்! நானோ, புதுச்சமுதாயத்தைப் போர், புகையின்றி அமைக்க விரும்புகிறேன்.”
வ.ரா.

வ.ரா அக்ரகாரத்து அதிசயப் பிறவி! அந்த இடத்து அறிவாளி என்றால், சாமத்துக்கு அர்த்தமும், சந்தியாவந்தனத்துக்குத் தத்துவமும், சஹஸ்ரநாமத்துக்கு வியாக்யானமும், சந்திர சூரிய கிரஹாதிகளின் உச்சஸ்தானம், பிரயாணம் ஆகியவற்றின் குணதோஷ உபதேசமும் செய்து கொண்டிருப்பவர், அல்லது ஆலகாபாத் தீர்ப்புக்கும் இமதாபாத் வாதத்துக்கும், சென்னை ஹை கோர்ட் தெரிவித்த விளக்கத்தையோ, இந்தியன் பினல்கோட் செக்ஷன்களில் இருக்கும் சந்து பொந்துகளில் நுழைய வழிகூறும் வேலையையோ, அல்லது இன்டபெண்டென்சுக்கும் இன்டர்டிபெண்டென்சுக்கும் உள்ள தாரதம்மியம், அமெரிக்க செனட்டுக்கும் ஆஸ்ட்ரேலிய பார்லியமெண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஆகியவற்றை விளக்கும் வேலையையோ, செய்பவர் என்று பொருள். வ.ரா. இதிலே, எங்கேயும் இல்லை! அதிசயம்!! குளத்தங்கரை, தவறினால், கோர;ட், இல்லையானால் தேசீய மேடை; உச்சிக் குடுமி, தலைப்பாகை, குல்லாய்; முகாரி, புன்னாகவராளி, ஆடாணா; ருத்திராட்சப்பூனை, வரிக்குதிரை, சீறும் சிறுத்தை; இப்படியிருக்க வேண்டும், அக்ரகார அறிவாளிகள், அங்கு இன்று உபயோகத்திலே இருக்கும் ஆகராதியின்படி வ.ரா. இந்த “ரகத்திலே” எதிலும் இல்லை! அவர் உண்மையிலேயே அக்ரகாரத்தின் அதிசயப் பிறவிதான். தேசீயக்கவி பாரதியாரின் சூழ்நிலை, இவரை ஓரளவுக்குத் தயாராக்கிற்று என்ற போதிலும், கூட்டை விட்டுப் பறந்து நெடுந்தூரம் சென்று இரைதேடி உண்டு, இடையே இனிய குரலால் பலரை மகிழ்வித்து, திசைபற்றிக் கவலையின்றி, தங்கும் இடைத்தைத் தான் இடமாகக் கொள்ளும், பாடும் பறவையானார், வ.ரா. பிறந்த இடம் அக்ரகாரம், இருப்பிடமோ, போர்க்களம் - போர்க்களம் மட்டுமல்ல, இருதரப்புப் படையினரும் வீசும் கணைகள் விழும் இடம்; அவர்மீதும் சிலபல தைக்கும்.

வ.ராமஸ்வாமி ஐயங்கார், புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் படையிலே உள்ளார்; ஆனால், அணிவகுக்கப்பட்ட படையிலே அல்ல, இன்றையப் போர்முறை மொழிப்படி, “கொரில்லா யுத்தம்” புரிபவர், அக்ரகாரம், ஒருவேளை அவரை உடன்பிறந்து கெடுப்பவர் என்று கருதக்கூடும்; நாம், அவரை இன்று தென் ஆப்பிரிக்காவிலே, சட்ட மறுப்பாளருடன் சேர்ந்து கஷ்டப்படும் சில பரங்கியர் போன்ற நிலையிலே இருப்பவராகக் கொள்வோம். ஆனால், அவரை, தள்ளிவிட முடியாது, இருதரப்பும். அவர் இரண்டு பக்கத்தவரும், தம்மீது பார்வையைச் செலுத்தும் நிலையை உண்டாக்கிக் கொண்டார் அவருடன் வேறு சிலரும் உள்ர், உருவங்கள் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை, தெரியவொட்டாதபடி உள்ளனரோ என்னவோ! நமக்கு இருக்கும் ஒருவசதி, வ.ரா.வுக்கு இருக்க முடியாது. நாறிப் போன கெள்கைகளை நாம் சமுதாயத்திலே காணும்போது, இப்படிப்பட்டவைகள் ஏன் புகுந்தன, எவர் புகுத்தினர் என்பதை விரைவிலே கண்டுபிடித்து, இவையாவும் ஆரிய சூழ்ச்சி என்று கூறுகிறோம்; இதனால் விளக்கமும் பிறக்கிறது, இந்நிலையை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதியும் “உத்வேகமும்” உண்டாக முடிகிறது. வ.ரா. ஆரிய சூழ்ச்சியே இன்றுள்ள ஆனர்த்தங்களுக்கு மூலக்காரணம், என்ற முடிவுக்கு வரமுடியாது. எனவே, அவர் காலம் பூராவும், மூலத்தைக் கண்டுபிடிக்கவே செலவிட்டாக வேண்டும், துருவித் துருவிப் பார்த்தாக வேண்டும்; அவரால், ஆரியர் செய்த சூதே சமுதாயத்தைக் கெடுத்துவிட்டது என்ற முடிவுக்கு வர முடியும் என்ற நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, நமக்கு இருக்கும் ஒரு வசதி அவருக்கு இல்லை. வ.ராவுக்கு இருக்கும் ஒரு வசதி, நமக்குக் கிடையாது! என்னதான் காரணம் காட்டினாலும், ஆராய்ச்சிகளைக் கொட்டினாலும், நமது வாதங்களைச் சுலபத்திலே அலட்சியப்படுத்திட முடியும், “வகுப்புத் துவேஷி” என்ற வார்த்தையை வீசி.

வ.ரா. பேசினால், அவரை “வகுப்புவாதி” என்று தூற்றி, அழித்துவிட முடியாது. கோபம் தலைக்கேறினால்கூட, அவரை, “விதண்டாவாதி” என்று கண்டித்துவிட முடியாது. அவருக்குக் கேடயம் இருக்கிறது! நமக்கு அந்த வசதி இல்லை. நமக்கு வாளை எங்கே வீச வேண்டும் என்ற குறி தெரிந்து விட்ட வசதி இருக்கிறது; அவருக்கு அந்த வசதி இல்லை! அவர், போராடுகிறார், கேடயம் தாங்கிக் கொண்டு, அறிவு எனும் வாள் ஏந்தி, ஆனால், ‘குறி’ எது? களத்திலே, அவருக்கு ஏற்படும் கவலை, அது! நமக்குள்ள கவலை, கேடயமில்லை என்பது. ஆனால், நாம், அவர் ஓர் போர்வீரர் என்பதை மறக்கவில்லை. அவர் ஓர் அதிசயப்பிறவி, என்பதைக் கூறாமலிருக்கவும் முடியாது. அவருடைய ஆற்றலையும் குறைத்து மதிப்பிடவில்லை. நிலைமையையே விளக்கினோம்.

வ.ரா. புரட்சிக் கருத்துக்களைக் கவிதையாக்கித் தரும் நமது கவிஞரைப் போலவே, புரட்சியைத்தான் தட்டி ஏழுப்புகிறறார், வசன நடையிலே!

நல்ல மாடி வீட்டிலே, ஆழகான பூந்தொட்டிகளை அலங்காரமாக வரிசையாக வைத்துக் காட்டுகிறார் வ.ரா.

ஆழகிய, உயர்தரமான, கோட்! அதிலே, பூச்செண்டு செருகிவிடுகிறார் காண்டேர் கார்.

பாரதிதாசன், பூங்காவையே அமைத்துத் தருகிறோர்.

காகிதப் பூஞ்சúôலை, தழைமாலை, இவைகளையே தயாரிப்பவர்களும் உண்டல்லவா!! அவர்கள் போலல்ல, வ.ராவும் காண்டேர்காரும்; ஆனால், அவர்கள் செய்யாததைப் புரட்சிக் கவிஞர் செய்தார். பூங்கா அமைப்பது, பூச்செண்டு செருகுவதைவிட, பூந்தொட்டிகளை ஆடுக்கிக் காட்டுவதைவிட, சிரரமான காரியம், ஆனால் சிலாக்கியமானதல்லவா!! பூந்தொட்டிகளை எடுத்து விடலாம், மாடிவீடு இருக்கும், எத்தனையோ மாடி வீடுகள் போல! பூச்செண்டை எடுத்துவிடலாம். உடை இருக்கும்!! ஆனால் பூங்காவிலிருந்து மலர்ச்செடிகளை எடுக்க முடியாது, பெயரும் உருவும், அழகும் பயனும் இருக்கமுடியாது! மலர்சசெடிகளின் வாழ்விடம் பூந்தோட்டம்! அந்தத் தோட்டத்தின் உழவர் பாரதிதாசன்!! சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்து ஆண்டு இருபது ஆகிறது என்று பெருமையுடன் கூறிக்கொண்டு, அந்த இயக்கம், சமூகப் புரட்சி இயக்கம், புத்துலக அமைப்புக்கான கருவி என்பதைச் சரியாக அறிந்துகொள்ளாமல், சுயமரியாதை இயக்கமென்றால், பார்ப்பனனின் உச்சிக்குடுமியையும், பிச்சுக் கொள்கையையும், நச்சு நினைப்பையும், தவளை நடையையும் கேலி செய்வதொன்றையே பெரு நோக்கமாக, முழு நோக்கமாக கொண்டது, வேறெதுவுமில்லை என்று கருதும், தோழர்கள் இருக்கக்கண்டு, மனவேதனைப்பட்டதுண்டு. வ.ரா. இந்த இயக்கத்தவரல்ல; ஆனால் இதிலே நாம் எதை எதை முக்கியமாக வலியுறுத்துகிறோமோ, எந்த உயிர்ப் பிரச்சனையின் மீது இந்த இயக்கம் கட்டப்பட்டு இருக்கிறதோ, அதனை உணர்ந்து, கடந்த 30 ஆண்டுகளாக, எழுதியும் பேசியும், நடந்தும் வருபவர் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, மகிழ்ச்சி மலரத்தான் செய்யும்.

“பழைய கோட்பாடுகள் எனும் குரங்குப் பிடியிலே சிக்கிச் சமுதாயம் சீரழிகிறது. மாயாவாதம் பேசி, மக்களை மயக்கிச் செயலற்றவராக்கி விட்டனர் மூதாதையர்; ஜாதி பேசிப் பேசி, பேதத்தையும் பேதைமையையும் வளர்த்து விட்டனர். விதவைகளையும், பொதுவாகமே மாதர் குலத்தையும், கொடுமைக்கு ஆளாக்கிவிட்டனர்.”

இவையும் இவைகட்குத் துணையாக உள்ள எண்ணங்களும் அந்தப் பார்ப்பனர் மனதிலே, ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்திருந்தால்கூட நாம் ஆச்சரியப்படத் தேவையிராது. அவருடைய “கோதைத்தீவு” நாம் கண்டு அதிசயிக்கத் தக்கதாக இருப்பதற்குக் காரணம், அக்ரகார அச்சகத்திலே இப்படி ஒரு பதிப்பு வெளிவந்ததே என்பதற்கேயன்றி, இந்தக் கருத்துக்களை இவர் கொண்டிருக்கிறாரே என்பதற்காக அல்ல; ஏனெனில், “கோதைத்தீவு” பார்க்கும் போது, அது நமக்குப் பழக்கமான, ஏன், ஏறக்குறைய நாம் அமைத்த இடம் போலவே தோன்றுகிறது. எனவே, வ.ரா. நமது முகாமில் இருக்கவேண்டியவர் என்று புன்னகையும் பெருமூச்சும் கலந்த குரலிலே கூறுவதற்குக் காரணம், “கோதைத் தீவு” கண்டதால் அல்ல. அவருடைய “சுந்தரி” நமக்கு, ஆவரிடம் மதிப்பும், அன்பும் பிறக்கச் செய்கிறது. ஏனெனில், சுயமரியாதைச் சூறாவளிக்குப் பிறகு, உதிர்ந்த மலர் என்று “கோதைத் தீவு” கூறப்படலாம், சுந்தரி அவ்விதமல்ல! ஏறக்குறைய சுந்தரிக்கும் சுயமரியாதை வீரனுக்கும் சமவயது! நம் இயக்கம் பிறந்து வளர்கிறபோது, சுந்தரயை வ.ரா. பெற்றெடுத்து வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார். சுந்தரி சிந்தனையில் வ.ரா.வுக்குச் சீர்திருத்தக் கருத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பே இருந்து, வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு, மறுக்க முடியாத எடுத்துக்காட்டு.

வ.ராவின் கதை அமைப்புத் திறம்கூட, சுந்தரி பிறந்தபோது, அவ்வளவு மெருகும் உயிரும் பெறவில்லை எனலாம்; ஆனால் கருத்துக்கள், மிக மிகத் தாராளமாக அன்றே நடமாடத் தொடங்கிவிட்டன. மாடிவீட்டின் அமைப்பு நம்மைக் கவர்ச்சியில் ஆழ்த்துவதைவிட, நான் முன்னே சொன்னபடி, அங்கு ஒழுங்காக ஆடுக்கி வைக்கப்பட்டுள்ள ‘பூந்தொட்டிகள்’ நமக்குக் கவர்ச்சி தருகின்றன. ‘சுந்தரி’ ஒரு மறுபதிப்பல்ல; சிந்தனை, சொந்தம்; அந்த நாளிலே கொஞ்சம் சிரமமான காரியம் மட்டுமல்ல, பலரின் சந்தேகத்தையும் கோபத்தையும் மட்டுமே பரிசாக எதிர்பார்க்க முடியும் அந்தக் காரியத்துக்கு உடாக.

“சுந்தரி” 1917ல் பிறந்தவள். சுயமரியாதை இயக்கம், தமிழகத்தில் தவழ்வதற்குத் தொடங்கும் நாட்கள் என்று கூறலாம். அந்த நாளிலே வெளிவந்த ‘சுந்தரி’யில் காணப்படும் கருத்துக்கள் எப்படிப்பட்டவை என்பதைக் காணும்போது தான், வ.ரா. அக்ரகாரத்து அதிசயப்பிறவி என்று நாம் கூற முடிகிறது. இன்று, சீர்திருத்தம் பேசுவது, சுலபம் - சுவையுடையதுங்கூட. “மன்மதலீலையைப் பாடும் மாட்டுக்காரச் சிறுவனின் மதுர ஆசை கண்டு நாம் மகிழலாம், ஆனால் மதிப்புத்தர வேண்டியது, அதனை மலரச் செய்த ஆசைமணி பாகவதருக்குத்தானே!”
*****

கந்தன் : தோன்றியழிவது இந்த யாக்கை! இந்த உயிர்நீரின் மேல் குமிழி! இந்த மண்ணின்மேல் இன்பம் எமையன் கனவு கண்டதை யொக்கும்! சுந்தரியில் காணப்படும் ஒரு பாத்திரம், பேசுவது இது. 1917க்கு இதுதான், நியாயமான, தேவையானதென்று கருதப்படும் கருத்து! இந்தக் கருத்தைப் பரப்புவதே அறிஞர்கள் கடமை, கல்வி கேள்வி இதற்கே பயன்படவேண்டும். இந்தக் கருத்தினையே காவிய முதற்கொண்டு கதைவரையிலே புகுத்தியாக வேண்டுமென்ற நியதி இருந்த நேரம். ஆனால் வ.ரா. கந்தனின் பேச்சைத் தட்டிப்பேசி, அவனுடைய மந்தமதியை மட்டந்தட்டி விடுகிறார், வேறோர் பேச்சின்மூலம். கந்தன் இங்ஙனம் பேசியதும் வேதாந்தம் பதில் கூறுகிறான். “இளைக் கொல்லும் தத்துவம் விளையாட்டிலே கூட என்னிடம் இனிமேல் பேசாதே. புத்தன் காலம் முதல் இந்தத் தத்துவம் இந்தத் தேசத்தைப் பாழாக்கி விட்டது. இரத்தம் சுண்டிப்போய்விட்டது. தாமசம் அதிகரித்துவிட்டது. விதி வலுத்துவிட்டது. பொய்ச் சன்யாசிகள் கூட்டம் மலிந்து விட்டது. சுயநலம் மேலிட்டு விட்டது. ஆண்மக்கள் பேடிகளாகி விட்டனர். தோட்டத்தைக் காக்க வேலிகட்டுவது வழக்கம். இந்து நாகரிகம் என்ற தோட்டத்தைக் காக்க நான்கு ஜாதிகளாகிய வேலியைக் கட்டினார்கள். இந்த வேலிக்குள் நாற்பதினாயிரம் வேலிகள் முளைக்கத் தலைப்பட்டன. இந்து நாகரிகம் என்றதோடடத்தையே காணோம்.”

வேதாந்தம் இந்துமத விஷயமாகத் தரும் வியாக்யானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது; வேதாந்தமோ வேறுமாதிரி பேசியிருக்க முடியாது. வ.ராவும், வேதாந்தத்தை வேறுவிதமாகப் பேச வைத்திருக்க முடியாது, ஏனெனில், வேதாந்தமும், வ.ராவும், அக்ரகாரம், அவர்கள் ஒரேயடியாக இந்துமதம் புகுத்தப்பட்டதனாலேயே தமிழர் சமுதாயம் சீரழிந்தது என்று கூற முடியாது. அதுபோலவே தமீôராகிய நாம், நாலு ஜாதியை, இந்து மத்துக்காகக் கட்டப்பட்ட வேலி ன்று ஏற்றுக் கொள்ள முடியாது. வேதாந்தம், நம்முடன் ஓட்டி வருவது - அதாவது வ.ரா. நம்மோடு ஓட்டிவருவது - உலகம் மாயை ஏன் பேசுது தவறு, கேடு பயப்பது என்ற அளவு வரையில் உண்மை வேதாந்தின் மூலமாக மேலும் பல கருத்துக்களை வெளியிடுகிறார், “இடபேதம்” என்ற இடருக்குள் சிக்கிக் கொண்டதால், முழுநிலவைக் காட்ட முடியாத நண்பர்.

“இந்த உலகம் ஒரு பெரும் சுடுகாடு. இதைவிட்டு விரைவிலே அகல வேண்டும், என்பதனாலேதான், எல்லா முயற்சிக்கும் எக்கம் குறைந்துவிட்டது. முயற்சி குறையச் சோம்பேறிகளாகி அறிவு குன்றி, இத்மாவைப் பற்றிய பேச்சு மாத்திரம் அதிகரித்து, யோக்கியவர்களாய்ப் பலர் உழைத்துச் சம்பாதித்து வைத்திருக்கிற பொருள்களைச் சிலர் கபடத்தினால் ஆபகரித்துக் கொள்ள, சுயநலம் மேலிட்டு, பொய்வேடம் பலப்பட்டுச் சுகம் குறைந்து மனதிலே அமைதி அற்பமாகி, புழுக்களென வாழ்கிறோம்.
*****

அருணாசலமய்யர் :
விதவா விவாகம் ஏற்பட்டுவிட்டால் இப்பொழுதிருக்கிற அத்தனை சாத்திரங்களையும் மாற்றவேண்டும். எல்லா ஜாதிகளும் கட்டுக்குமீறி ஒன்றாய்ப் போய்விடும்.

வேதாந்தம் :
அப்படியாகி விட்டால் பிரளயகாலம் வந்துவிடுமோ? சீமையிலே நாலு ஜாதிகள் இல்லையே. அவர்கள் செத்து விட்டார்களா?

அருணா :
அங்கேயும் மனிதர்களுக்குள்ளே வித்தியாசமில்லையா?

வேதாந்தம் :
உண்டு. ஒருவன் கவி. ஒருவன் வைத்தியன். ஒருவன் வியாபாரி வித்யாசமான குணங்கள் உள்ளவர்கள்.

“சுந்தரி”யில் இதுபோன்ற சீர்திருத்தக் கருத்துத்துவையல் நிரம்ப இருக்கிறது.

மற்றோரிடத்திலே, வ.ரா. ராமர்மீது வழக்குத் தொடுக்கிறார்.

“சீதையிடம் ராமனுக்கு இருந்த காதல் சிறந்ததே. பிள்ளைகளுக்குப் பெண்களிடமிருக்க வேண்டிய காதலின் ஒரு மாதிரி. ஆனால் ராமன், வண்ணான் பேச்சைக்கேட்டுச் சீதையைக் காட்டுக்கு அனுப்பினதை எதையோ, எண்ணிக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் எழுதிவிட்டார். ராமனை நல்ல அரசானக்க எண்ணி மனிதனுடைய சாதாரண அன்பு ஆவரிடம் இல்லாமல் அடித்துவிட்டார். கருப்ப சமயத்திலே சீதையைக் காடடுக்கனுக்புதல் அவளுக்குச் சாவையுண்டாக்கவும் கூடும் என்று ராமன் எண்ணினதில்லைபோலும். பிறர் வம்புப்பேச்சு, சிறிய மனிதர்களின் சோதனைக கருவி. இராமன் இதைக் கைக்கொண்டு, ஸ்திரிக்கு உயிர்த்தோழன் என்று காட்டிக் கொள்ளத் தவறினார்” அச்சமும் தைரியமும், போட்டியிட்டு, வ.ரா.வை ஆலைக்கழிக்கிறது இங்கே. இராமன் மீது குற்றம் சாட்ட வேண்டும், என்று தைரியமாகத் தான் கிளம்புகிறார், மறுபடி அஞ்சுகிறார். சுற்றுமுற்றும் பார்க்கிறார். ஒரு அடி எடுத்து வைக்கிறார், முடிவில் “தவறிவிட்டார்” என்று தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொல்லியும் விடுகிறார். ஆனால் இது 1917ல்! இந்த எண்ணத்துடன், இன்றைய சேதுப்பிள்ளைகளின் எண்ணத்தை ஒப்பிடும்போது, என்ன எண்ணத்துடன், இன்றைய சேதுப்பிள்ளைகளின் எண்ணத்தை ஒப்பிடும்போது, என்ன எண்ணம் நமக்கு வரும்! ‘சுந்தரி’யில் சில இடங்களிலே, வ.ரா. சிரமப்பட்டிருக்கிறார், காலத்தையும் மீற வேண்டும், கட்டுத் திட்டத்தையும் மீறவேண்டும், குலத்தையும் ஊதாசீனம் செய்துவிடக் கூடாது, இவ்வளவு இடையூறுகளுக்கிடையே “சுந்தரி”யைத் தீட்டியிருக்கிறார். ஆனால் கூடுமானவரையில் முற்போக்குக் கொள்கைகளைப் பச்சையாகச் சொல்வதைவிட, ஒரு பெண்ணினட, சுந்தரியின் அதிலும் ஒரு விதவையின் கதை மூலமாகச் சொல்வோம் என்று திட்டமிட்டுச் சொல்லி இருக்கிறார். இதற்கே அவருக்கு எதிர்ப்பு இருந்தது. இன்றும் எதிர்ப்பு இருக்கிறது என்று வ.ரா. என்னிடம் றினார் ஓராண்டுக்கு முன்பு, இருக்கும். ஆனால் அந்த “எதிர்ப்பு”க்கும், அதேவிதமான கருத்துக்களைப் பரப்பும் சுயமரியாதைக்காரர்களுக்குள்ள “எதிர்ப்பு”க்கும், பெரிய, பயங்கரமான வித்யாசம். அவர்மீது “ரப்பர்பாம்பு” வீசப்படுகிறது. சுயமரியாதைக்காரன் மீது நாகம் வீசப்படுகிறது! “சுந்தரி”யில் காணப்படும் முற்போக்கான கருத்துக்களைவிடத் தீவிரமான கருத்துக்கள், மூலக்கருத்துக்கள், அச்சமின்றி, தெளிவாக, குடி அரசுப் பதிப்பகத்தின் எந்த ஏட்டிலும் கிடைக்கும். எட்டணா செலவு போதும். சுந்தரிய்ன விலை ஐந்து ரூபாய்! நான் மகிழ்ச்சி ஆடைகிறúன், ஐந்து ரூபாய் கொடுத்து நண்பர்கள் “சுந்தரி”யை வாங்கும்போது! சுயமரியாதை இயக்கத்தை வீணாக எதிர்த்த குற்றத்துக்காக, அறிவு உலகம், விதிக்கும் அபராதத் தொகை 4-8-0. என்றே நான் கருதிக் களிக்கிறேன்.

“சுந்தரி”யில், 1917ல், வ.ரா. விதைத்த கருத்துக்களின் மலர்கள், கனிகள், அவருடைய புதிய புதிய ஏடுகளிலே எழிலுடன் விளங்குகினறன. தன்னந்தனியாக நின்று அக்ரகாரத்திலேயே இருந்த வண்ணம் அறிவுக்காகப் போராடிய இந்த அதிசய மனிதர் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் பெரும்படையிலே ஒருபிரிவுக்குத் தலைமை தாங்குகிறார்.

(திராவிடநாடு - 18.5.47)