அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தமிழர் திருநாள்

வாழிய! பொங்கல், வாழிய! தமிழ்மொழி;
வாழிய! தமிழகம். வாழிய! தமிழிசை;
மஞ்சளும் இஞ்சியும் வானுயர் கரும்பும்
செந்நெல் அடிசிலும் தீங்கனி புறவும்
நிலமகள் தந்த வளனெனப் போற்றும்
செந்தமிழ்த் திருநாள் சிறப்புற வந்ததால்;
பொங்குக பொங்கல்! எங்கணும் நன்குற;
தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர்தம் நாடு உரிமை பெற்று உலகினில் மிளிரவும்,
ஆண்மை சிறக்கவும் அறம்பல பெருகவும்,
நாடும், மக்களும் நலமெலாம் பெறவும்,
வாழிய பொங்கல்! வளம்பல பொழிந்ததே!
திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விசுவநாதம்
சித்திரபானு, தை 1 மணிவாசகத் தமிழகம்

(திராவிடநாடு - 17.01.1943)