அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தீ அணைக்கும் படையினரே!

புராண இதிகாசாதிகளைத் தீயிலிடக் கூடாது என்று திக்கெட்டுமூ முழுக்க மிடுபவர்களே! இன்றிருந்து ஓர் திங்கள் வரை, புராண இதிகாசாதிகள் இருக்கத்தான் வேண்டுமென்பதற்குக் காரணங் காட்டியும், மேற்படி புராணாதிகளைக் கண்டித்துப பகுத்தறிவாளர்கள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிகளை மறுத்தும், கண்ணியமாகவும், யோக்யப் பொறுப்புடனும், கட்டுரை எழுதுவீரேல், அவைகளை நாம் வெளியிடவும், அவற்றுக்குச் சமாதானந் தீட்டவும் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக கொள்கிறோம். பொது மக்களிடம் இருசாராரும விஷய விளக்கம் செய்வோம், வாரீர்! திகைப்பு, துயரம், பதைப்பு, சந்தேகம் கொண்ட தோழர்கள் புராண இதிகாசாதிகளின் ஆபாசத்தைக் குறித்துச் சுயமரியாதை இயக்கம் கூறும் கருத்துகள் பற்றிக் கேள்விகள் அனுப்பினால், கேள்விக்கேற்ற முறையிலே பதில் அளிக்க திராவிட நாடு தயார், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சேலம் சுயமரியாதை மாநாட்டில் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு கூடாது என்ற கருதியே, வழக்குக்கு வாய்தா தரப்பட்டிருக்கிறது.

ஒரு திங்களில் உமது கட்சிக்கான ஆதாரங்களைக் காட்டுக.

(சுயமரியாதைக்காரர்கள் - திராவிடநாடு - 24.01.1943)