தோழர் என்.சிவராஜ் அவர்கள்
சென்னை மேயராகத் தேர்தெடுக்கப்பட்டார். பழங்குடி மக்களின்
பாதுகாவலராக இருப்பவரும், அகில இந்தியப் புகழ்பெற்றவருமான
தோழர் சிவராஜ் அவர்களின் வெற்றி குறித்து மகிழ்கிறோம்.
அவருடைய மேல் காலத்தில் சேரி சீர்திருத்தமும், ஏழைகள்
விடுதி சம்பந்தமான சீர்திருத்தமும் நல்ல முறையிலே நடைபெறுமென்று
நம்புகிறோம்.
(திராவிடநாடு - 25.11.1945)