அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


பொங்கல் வாழ்த்து
பொலிவு பொங்கிடும்
பொங்கற் புதுநாளில்
மகிழ்வு பொங்கிடும். நின்
மனையுளார் அனைவர்க்கும்,
என்வாழ்த்து தனை அதற்குத்
தேனாக்கிக் கலப்பதற்கு
வழங்கி மகிழ்கின்றேன்.
வாழியநீ என்றென்றும்,
வாழ்வும் வளமும் மங்காத
தமிழ் என்பார்!
தமிழ்வாழ நாம் வாழ்வோம்.
அறிவாய் நன்றாய்!
நாம்வாழ் வில்பெறும் இன்பம்
கரும்பாகிடல் வேண்டும்
நாட்டி னோர்க்கு.
'தை' அதனில் காணும் செல்வம்
தமக்கென்றே கொண்டனரோ
உழவர், மேலோர்!!
தாரணிக்கு நாம்அளிக்கச்
செல்வம் காண்போம்.
நல்லறம் இஃதெனக் கண்ட 'நம்பி'
நான் வாழ்த்துகின்றேன், உன்
வெற்றிக்காக!

அண்ணன்,
அண்ணாதுரை

(திராவிட நாடு - 1963)