அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

மனிதன்

மனிதா!
நீ யாருக்கும் தலைவணங்காதே,
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை, செருக்குள்ளவரை,
மதவெறியரைத் தள்ளிஎறி.
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பே மதி, ஊருக்குதவு.
உனக்கு எட்டாத கடவுளைப் பற்றிப் பிதற்றாதே!
சிந்தனை செய்! செயலாற்று!

(திராவிடநாடு - 12.06.1955)