பொதுச்
செயலாளர் அண்ணா அறிக்கை
சென்னை மாவட்டத் திராவிட முன்னேற்றக்
கழகம் நிறைவேறியுள்ள தீர்மானங்களை என்னிடம் நேரில் கொண்டு
வந்த கொடுத்து, மாவட்டச் செயலாளர் நீல. நாராயணன், முன்னாள்
மேயல் அ.பொ.அரசு, துணை மேயர், அ.செல்வராசன் ஆகியோர் நிலைமைகளை
விளக்கிக் கூறினர்.
உயர்தரப் போலீஸ் அதிகாரியைக்
கண்டு தீர்மானங்களைக் கொடுத்து ஊர்வலத்திற்கு அனுமதி வாங்கும்படிக்
கேட்டுக் கொள்ளவும் மேற்கொண்டு ஆவன செய்யவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு அளிக்கும் விளக்கத்தைக் கேட்டு, ஊர்வலத்திற்கு ஆன
அனுமதி அளிக்கும்படி நானும்கேட்டுக் கொள்கிறேன்.
அனுமதி மறுக்கப்படுமானால்்,
மாவட்டக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானப்படி ஊர்வலத்தை நடத்திக்
கொள்ள அனுமதி அளித்தும் இருக்கிறேன்.
ஊர்வலம் அமைதியாக, ஒழுங்காக
எத்தகைய புகார்களுக்கும் இடம் தராத முறையில் நடத்தப்படவேண்டும்
என்பதை வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன். கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு காத்துப் பணிபுரிய வேண்டிய பொறுப்பினை உணர்ந்து
கழகத் தோழர்கள் நடந்து கொளள்க் கேட்டுக் கொள்கிறேன்.
(நம்நாடு
- 13-9-61)