அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


நாரணத் துரைக்கண்ணனார் படத்திறப்பு விழா

(அண்ணாவின் ஒரு நிமிடப் பேச்சு)

நண்பர்களே, தமிழ் உலகத்திலே நன்கு மதிப்புப் பெற்றவரும், மாணவர்களுடைய இதயங்களை வென்றவருமான நண்பர் துரைக்கண்ணனார் அவர்கள் யாரும் எதிர்பாராத முறையில் மறைவுற்றார்கள். அவரிடத்திலே மாணவர்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பினை விளக்குகின்ற வகையிலேயும், அவருடைய நினைவு என்றென்றும் நம்முடைய உள்ளத்தில் பசுமையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயும் இந்தத் திருவுருவப்படத்தை என்னைக்கொண்டு நண்பர்கள் திறக்கும்படியாகச் செய்திருக்கின்றார்கள். அவருடைய அருமை பெருமைகளைப்பற்றி  மிகச் சீரிய முறையிலே கவிதையாக இயற்றி நண்பர்கள் பாராட்டுத் தெரிவித்தார்கள். அவருடைய சீரிய குணங்களை மற்றவர்கள் பின்பற்றி மாணவர்களுக்கு நல்ல துணைவர்களாக விளங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவருடைய சிறப்புகளை எடுத்துச்சொல்வதற்கேற்ற வாய்ப்பினை நான் பிறிதொரு சமயம் பெற்றுக்கொள்வதாக இருக்கிறேன் என்பதை தெரிவித்து, இந்த உருவப்படத்தினைத் திறந்துவைத்து அதனை நண்பரிடத்திலே ஒப்படைத்திருக்கிறேன் என்பதைக் கூறி விடைபெறுகின்றேன். வணக்கம்.