அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


புதிய வரலாறு
1

தி.மு.கழகம் இவ்வளவு விரைவில் அரசுப் பொறுப்பை ஏற்குமென்று அரசியல்வாதிகள் எதிர்பார்க்கவில்லை; எதிர்பார்க்காதது மட்டுமல்ல; ஆளத் தகுதியில்லையென்றும் எண்ணினார்கள். அது மட்டுமல்ல; அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்றும் எண்ணினார்கள்.
யாரை லாயக்கற்றவர்களென்று கருதினார்களோ-யாரை சினிமாக்காரர்கள் என்று ஏளனம் செய்தார்களோ-திராவிட முன்னேற்றக் கழகத்திலே படித்தவர்கள்தான் இருக்கிறார்கள்-பாடுபடுகின்ற கிராம மக்கள் இல்லையென்று பச்சைக் கேலி பேசினார்களோ அவர்கள்தான் இன்று அரசுப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

ஆற்றிலே கருப்பு நிறமான ஒரு பொருளை வெள்ளம் அடித்துக் கொண்டு போகிறது. அநேகமாக அது கம்பளியாகத்தான் இருக்கலாமென்று சொல்ல-பக்கத்திலிருப்பவன் அதை எடுக்க ஆற்றிலே குதிக்க, அந்தக் கம்பளியோடு அவனும் ஆற்றோடு போக ஆரம்பிக்க, இதைப் பார்த்ததும் கரையிலிருப்பவன் “கம்பளி போனால் போகட்டும். நீ வந்துவிடு. நீயும் ஆற்றோடு போய் விடாதே!” என்று சொல்லிக் கரைக்கு அழைக்க, “முடியாது, முடியாது, நான் போனாலும் பரவாயில்லை. கம்பளி போகக்கூடாது!” என்று கூறினானாம் கடைசியில் அது கம்பளி அல்ல, கரடி என்று தெரிய வந்தது-கிராமப்புறத்தில் இப்படிக் கதை சொல்வார்கள். அதுபோல, தி.மு.கழகத்தைக் கம்பளியென்று நினைத்தவர்கள் 67ல் கிட்ட வந்து தொட்டவுடன் தான் கரடியென்று உணர்ந்திருக்கின்றனர்.

அதற்குக் காரணம் பொதுமக்கள் தான்!

நெசவாளர்கள் நமது பக்கம் இருக்கிறார்கள்-உழவர்கள் நமது பக்கம் இருக்கிறார்கள்-அன்றாடம் உழைத்துண்ணும் பாட்டாளிகள் நமக்காகவே இருக்கின்றார்கள், என்பதை இப்பொழுதுதான் காங்கிரசார் அறிந்துள்ளனர்.

தி.மு.கழகம் வளர்ந்துள்ள கதையைப் பார்த்தால்தான் அதன் பழைய வரலாற்றை நினைத்தால்தான்-அதன் அருமை தெரியும்.

1957 ல் சட்டமன்றத்திற்குக் கழகம் போட்டியிட்டது. அப்பொழுதெல்லாம் சமுதாயத்தைச் சீர்செய்யும் எதிர்க்கட்சியாகவே நாம் இயங்க வேண்டுமென்று நினைத்தேன். ஆதலால் 1949 முதல் 1957 வரை மக்களுக்குச் சமூகப் பணி புரிவதே எங்கள் கட்சியின் இலட்சியம் என்று நினைத்தேன்.

அப்பொழுது காங்கிரசார் சொன்னார்கள், “முடிந்தால் சட்டமன்றத்திற்குள் நுழைந்து பாருங்கள்?” என்று! சரி, நாமும் முயன்றுதான் பார்ப்போமே என்று நினைத்தேன். இந்த ஆசையைத் தூண்டிவிட்டதே காங்கிரஸ்தான்.

நான்கூட அப்பொழுது பொறுத்துக்கொண்டேன். ஆனால் தோழர்கள் கேட்கவில்லை. அதன் பலன், தேர்தலில் நின்றோம்; 15 பேர் சட்டமன்றத்திற்குள் நுழையவும் செய்தோம்.
டோல்கேட் முடவன்

அதைப் பார்த்த பிறகும் காங்கிரசார் எங்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை. அடுத்த தேர்தலில் 5 பேர் கூட வரமுடியாது என்றனர். இதைக் கேட்டதும் ரோஷம் வராதா எங்களுக்கு? போட்டியிட்டோம். 15 பேராக இருந்த நாங்கள் 50 பேராகக் கோட்டைக்குச் சென்றோம்; பாராளுமன்றத்தில் இரண்டு பேராக இருந்த நாங்கள் எட்டுப் பேராகக் கூடிச் சென்றோம்; சென்னை மாநகராட்சியையும் கைப்பற்றினோம்.

அதன் பிறகேனும் இது மக்கள் ஆதரவை பெற்ற கட்சி, உண்மையான ஜனநாயகக் கட்சி என்று உணராமல் மறு முறையும் 67ல் பார்ப்போம் என்றார்கள்.

பொன்னேரிப் பகுதியில் டோல்கேட் ஒன்றுள்ளது. அங்கே ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு போகிற வண்டிக்காரனை மிரட்டிப் பணம் பறித்துக் கொண்டிருந்தான். எட்டணாக் கொடுத்தால்தான் வண்டியை விடுவான். அதுவும் வண்டிக்காரனிறங்கி வந்து அவனிடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விடமாட்டேன் என்று கூறுவான். ஒருநாள் துணிந்த வண்டிக்காரன் ஒருவன் ‘வந்தால் விடமாட்டேன் வந்தால் விடமாட்டேன் என்கிறாயே, வந்து பாரேன்’ என்றான். அதனால் வர முடியவில்லை. காரணம் கால் நொண்டி! பிறகு மிரட்டாது அழ ஆரம்பித்தான்.

அதுபோல, பொன்னேரி டோல்கேட் காரனைப் போல கழகத் தோழர்களை மிரட்டி அடுத்த தடவைக்குள் பார் என்று அச்சங் காட்டினர்.

அவர்கள் அப்படி மிரட்டியதன் பலன்தான் இன்று 137 பேர் வெற்றி பெற்றிருக்கிறோம். தனியாக இந்த வெற்றி பெறவில்லை, சுதந்திரா-முஸ்லீம் லீக்-பிரஜா சோசலிஸ்டு, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டுறவால் வெற்றி பெற்றது. இதில் வலதுசாரி கம்யூனிஸ்ட் மட்டும் எல்லா இடத்திலும் ஆதரிக்காமல் இரண்டொரு இடத்தில் மட்டும் ஆதரித்தது. தமிழரசுக் கழகத்தின் ஒத்துழைப்பு, தேர்தல் காலத்திற்கு மட்டுமல்ல, தொடர்ந்தும் இந்த அரசுக்குக் கிடைத்திருக்கிறது. தமிழகமெங்கும் சேலம் இரும்பாலைக்கும்-தூத்துக்குடித் துறைமுகத்திற்கும் நடந்த எழுச்சி நாளில் எல்லாக் கட்சிகளும் சேர்ந்தன. ஆதரவாக முழக்கமிட்டன. இதில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மட்டும் சேரவில்லை. தி.மு.க.நிறைய ஆதரவு பெற்றது என்று நினைத்தாலும் மக்களிடத்திலே தனிச் செல்வாக்கு-யாரும் பெறமுடியாத அளவுக்குப் பெற்றிருக்கிறது என்றாலும், வெளியிலே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தின் தனிப்பெருமை
இங்கு மட்டுமல்ல, காங்கிரஸ் தோற்றது; கேரளத்திலே தோற்றது; அரியானாவில் தோற்றது; மேற்கு வங்கம்-ஒரிசா ஆகிய இடங்களிலும் தோற்றது; இவ்வளவு இடத்திலும் காங்கிரஸ் தோற்றுக் கூட்டரசு அமைந்தாலும் தமிழகத்தில்தான் தி.மு.கழகம் தனியரசு அமைத்திருக்கிறது.

காங்கிரசில் உள்ளவர்கள் இன்னமும் தங்களை நல்லவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டுமானால் “எவ்வளவு இடங்கள் போய்விட்டன? அவை ஏன் போய்விட்டன?” என்பதை உணர வேண்டும்.

அதை விடுத்து கழகத்தை ஏசுவதால் தான் தங்கள் கட்சி வளர்கிறது என்று தப்புக் கணக்குப் போட்டார்களே-அதே பாணியில் இன்னும் எத்தனை காலம் இருப்பார்கள்?

இவர்கள் என்ன சாதிப்பார்கள் என்று இன்னமும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் தி.மு.க. தோழர்கள் நமது சாதனைகளை விளக்கி மேடைக்கு மேடை சொல்லி வருகிறார்கள். இதைக் கேட்ட காங்கிரசார் அதைக்கூட பொறுக்காமல் “இது போதுமா? இது போதுமா?” என்கின்றனர்.

இவர்கள் நாடாண்டபோது இவர்கள் ஆட்சியில் உற்பத்தி பெருகவில்லை. ரேஷன் கடையிலே கால்கடுக்க காலை 6 மணிக்கே கைக்குழந்தையுடன் தாய்மார்கள் நின்றிருக்கும் காட்சியைத்தான் உருவாக்கினார்கள். அப்படியே நின்றிருந்தாலும் வீடு திரும்பும்போது அரிசியோடு வந்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? கண்ணீரும் கம்பலையுமாக வாடிய முகத்தோடும் வறுமை நிறைந்த தோற்றத்தோடும் வந்தார்கள்.

நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 8 லட்சம் டன் கொள்முதல் செய்து குடும்பக் கார்டு உள்ள இடங்களுக்கெல்லாம் படி அரிசித் திட்டத்தைப் பரப்ப நினைத்தோம். காங்கிரஸ் கட்சியினர் இத்திட்டம் வெற்றி பெறாது என்று ஊர் தோறும் கெக்கலி கொட்டிச் சிரித்தார்கள். அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள்; பலவந்தமாக நெல்லைப் பறிமுதல் செய்கிறார்கள் என்று புகார்கூறிய வண்ணமிருந்தனர்.

ஆனால் உழவர்களின் ஒத்துழைப்பால் அரசு இரண்டே மாதத்தில் 5 இலட்சம் டன் கொள்முதல் செய்திருக்கிறது. அரிசி இல்லையென்று சொல்லாமல் ரேசன் கடைக்குச் சென்றால் அரிசி வாங்கி வரலாம் என்ற நம்பிக்கையோடு மக்கள் செல்லும் நிலையை உருவாக்கியிருக்கிறோம். ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டத்தால் 8 கோடி நட்டமானாலும் சரியென்று நடத்திடத் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

எந்தெந்த விதத்தில் எதையெதை எப்படிச் செய்தால் உற்பத்தி பெருகும் என்று ஆராய்ந்து அந்த விதத்தில் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இவ்வருடத்தில் மட்டும் நீர்ப் பாசன வசதிக்காகக் குளங்கள் தூர்வார-கிணறுகளைச் செப்பனிட 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்காரர்கள் சொன்னார்கள், “தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் பள்ளிகள் மூடப்படும்” என்று! ஆனால் நாம் கல்விக்காக அவர்கள் செலவிட்டதை விட 7 கோடி அதிகமாகச் செலவு செய்யத் திட்டம் வகுத்துள்ளோம்.

சிட்டுக் குருவிகள் ஒன்று சேர்ந்தால் வல்லூறு ஓடிவிடும்; சிட்டுக் குருவிகள் போன்ற மக்கள் ஒன்று சேர்ந்து வல்லூறு போன்ற காங்கிரசை விரட்டி தி.மு.கழகத்திற்கு மணிமகுடம் சூட்டினார்கள்.

இவை மட்டுமல்ல; சர்க்கார் உதவியின்றி வானத்தை மட்டும் நம்பி வாழும் உழவர்களுக்குப் புன்செய் நிலத்திற்கு வரியில்லை. ஏழைகளுக்குத்தான் இலவசப் புகுமுகக் கல்வி என்ற முறையை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இதே நேரத்தில் நிலத்தை வைத்துத் தேவைக்கு அதிகமாகச் சம்பாதித்து இலாபம் அடைபவர்களுக்கு போட்டால் தாங்ககக் கூடியவர்களுக்கு வரிப் போட்டிருக்கிறோம்.
இவை மட்டுமின்றித் தொழில் நிலையம் ஏற்படுத்தி வேலை வாய்ப்புக் கொடுக்க முயற்சி நடைபெறுகிறது.

காங்கிரஸ் பாராட்டாத காரணம்
ஏராளமாகத் தமிழகத்தில் கல்லும் முள்ளுமாக இருக்கும் காட்டுப் பகுதிகளை விவசாய அமைச்சர் கோவிந்தசாமி விளை நிலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

மக்கள் முன்னேற்றத்திற்காகச் செய்த நமது சாதனையை இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள இதழ்களெல்லாம் பாராட்டுகின்றன. வெளிநாட்டிலிருந்து வருவோரும் போவோரும் வாயாரப் புகழ்கின்றனர். ஆனால் காங்கிரஸ் பாராட்டவில்லையே என்று நினைக்கலாம்.

அவர்கள் ஆண்டு அனுபவித்தவர்கள்-பஸ் முதலாளிகளின் கைலாகு பெற்றவர்கள்-பணக்காரர்கள் வீசிய நோட்டுகளைப் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள்-சுகபோகத்தை அநுபவித்தவர்கள்-திடீரென்று உல்லாச வாழ்வை இழந்துவிட்டால் எரிச்சல் கண்டு ஓலமிடத்தான் செய்வார்கள். காலம் முழுவதும் தாங்களே என்று மனப்பால் குடித்தவர்கள் பதவி பறிபோனதால் எரிந்து விழுகிறார்கள்.

நல்ல நாடகம் ரசனையோடு நடந்துகொண்டிருக்கும் போது கூட்டத்திலிருப்பவன் முதுகை நெளித்தால் பக்கத்திலுள்ளவன் ‘ஏனய்யா முதுகை நெளிக்கிறாய்; நாடகம் ரசனையோடு நடக்கிறது. அதைப் பார்’ என்பான். ‘முதுகில் ஏதோ அரிக்கிறது; அதனால்தான்’ என்று முதுகை நெளிப்பவன் பதில் கூறுவான். நாடகம் ரசனையோடு நடந்தாலும் இவனுக்கு அதில் கவனமிராது.
அதுபோல நாம் என்னதான் நல்லது செய்தாலும் முதுகை நெளித்தவன் போலக் காங்கிரஸ் நண்பர்கள் நெளிகிறார்கள்.

மாலை நேரத்தில் கூட்டம் போட்டு அதில் அரைமணி நேரம் திட்டுவதற்காக ஒதுக்கி-என்னைத் திட்டுவதால்-அவர்கள் மனத்திருப்தி அடைகிறார்களென்றால் அதை நான் தடுக்கவில்லை. ‘என்னை அண்ணனாகக் கண்டு-அறிஞராகக் கண்டு-அமைச்சராகக் கண்டதால் ஆசை நிறைவேறியது’ என்றார் ஒருவர்.

ஆனால் எனது ஆசை எப்பொழுது நிறைவேறுமென்றால், உழுபவன் உண்மையான வாழ்வு வாழ்கிறான்-நெசவாளி நேர்த்தியாக வாழ்கிறான்-பாட்டாளி பட்டினியின்றி வேலை செய்கிறான் என்ற நிலை எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுதான் என்று ஆசை நிறைவேறும்!

மாநிலத்தின் அதிகார வரம்பு
நெசவாளர்களின் போதுமான அளவுக்கு நூல் வேண்டுமென்று என்னிடம் கேட்கிறார்கள். ஆலை கொடுக்கும் நூலுக்கு விலையை நிர்ணயம் செய்வது டில்லி. நான் அதற்கு எழுதத்தான் முடியுமே தவிர வேறேதும் செய்ய முடியாது. இதை மக்கள் உணர வேண்டும். என்னிடம் நூல் டிப்போ இருப்பது போலவும், நான்தான் அதைப் பகிர்ந்து கொடுப்பது போலவும் யாரும் நினைத்து விடக்கூடாது.

பொதுவாக மக்கள்-குறிப்பாகத் தி.மு.கழகத் தோழர்கள் மாநில அரசுக்கு என்ன அதிகாரங்கள், மத்திய அரசுக்கு என்ன அதிகாரங்கள் என்பதை உணரவேண்டும்.

உங்கள் வீட்டிற்கு நான் வந்தால் நாலடி உயரத்திலுள்ள பொருளை எடுக்கச் சொன்னால் என்னால் எடுக்க முடியும். ஆனால் ஆறடி உயரத்திலுள்ள பொருளை எடுக்கச் சொன்னால் எப்படி என்னால் இயலாதோ, அதுபோல எனக்குள்ள அதிகாரத்தை வைத்துத்தான் உங்களுக்கு எதுவும் செய்ய முடியும்.

இப்பொழுது தூத்துக்குடிக்கு 25 கோடி ரூபாயும், சேலம் இரும்பாலைக்கு 120 கோடி ரூபாயும் தேவைப்படுகின்றன. ஆனால் வருட வருமானம் 200 கோடி ரூபாய்தான். இதில்தான் அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளம், கல்விச் செலவு ஆகியவற்றிற்குக் கொடுக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசுக்கு வருமானம் 3000 கோடி. சர்க்கரையிலிருந்து குடிக்கும் பீடிவரை உள்ள வரியெல்லாம் மத்திய அரசுக்கே போய்ச் சேருகிறது. வீடுகட்ட சிமிட்டி வாங்கினாலும் ரயில் ஏறினாலும் கார்டு, கவர் வாங்கினாலும் அதன் இலாபம் மத்திய அரசுக்கே போகிறது.

காங்கிரஸ் இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்து காங்கிரசை விட்டால் இந்த நாட்டை ஆள யாரும் கிடையாது என்று ஊரை நம்பவைத்தார்கள்-உண்மையைச் சொல்லப் போனால் என்னையும் நம்ப வைத்தார்கள்.

ஏழை மக்களின் பெருமூச்சை மதிக்காமல் ஆளமுடியும், என நினைத்த காங்கிரசார் வீழ்ந்தார்கள். இந்த வீழ்ச்சியைக் கண்டபின் காங்கிரஸ் தலைவர்கள் திடுக்கிட்டுத் திகைத்துப் போனார்கள். பதைபதைத்து வாயடைத்துப் போனார்கள்.

இப்போது வாய் திறந்துள்ளார்கள். தி.மு.க.ஆட்சி எவ்வளவு நாட்கள் நீடிக்கும், என்று கேட்கிறார்கள். நான் அவர்களுக்குக் கூறிக்கொள்வேன். இங்கே என் எதிரில் திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பும்வரை எங்கள் ஆட்சி நீடிக்கும்; ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பெற்றவர்கள் மக்கள்தான்.

இந்த ஆட்சி எளிதாகக் கிடைத்ததும் அல்ல. எதிர்பாராமல் கிடைத்ததும் அல்ல. நமது தோழர்கள் இதற்காகச் சிந்தி கண்ணீர், ரத்தம் கொஞ்சமல்ல. தி.மு.க.ஆட்சி ஏழைகளின் ரத்தம், கண்ணீர், வியர்வை ஆகியவற்றின் அடித்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டது. அந்த உண்மையான தோழர்களுக்கு மதிப்பு இருக்கும்வரை ஆட்சி இருக்கும்.

காங்கிரஸ்காரர்களே! இப்பொழுது என்னைத் திட்டுகிறீர்கள். இவ்வளவு நாளும் திட்டியது போதாதா? அப்படி உங்களிடம் என்னதான் திட்டுவதற்குப் பாக்கி இருக்கிறது? எந்த வார்த்தை மிச்சம் இருக்கிறது?

உலகத்தில் உள்ள அசிங்கமான பொருள்களோடு என்னை ஒப்பிட்டுப் பேசாததா? என் குடும்பத்தைக் காட்டித் திட்டாததா? என் நண்பர்களை இழிவுபடுத்தித் தாக்காததா? என்ன பாக்கி இருக்கிறது? நீங்கள் இவ்வளவு பேசியபின் தானே எங்களை மக்கள் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள்?

விக்கிரமாதித்தன் காடு ஆறு மாதம், நாடு ஆறுமாதம் என்று இருந்ததைப் போல; நீங்கள் ஆறு மாதம் பேசாமல் இப்போது வந்து ‘எவ்வளவு நாள் பதவியில் இருந்து விடுவீர்கள்’ என்று கேட்கிறீர்கள். உலகம் உங்களை எள்ளி நகையாடதா? நாங்கள் பதவியில் இல்லாமல் இருபது ஆண்டுகள் இருந்தோம். உங்களால் இருபது நாட்கள் இருக்க முடியவில்லையே?

இந்தக் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு தூரம் அந்தப் பதவியை அனுபவித்தார்கள் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். பையில் நான்கு அணா வைத்துக்கொண்டு காப்பி குடிக்கச் செல்பவன் காசைத் தொலைத்துவிட்டால் அங்கும் இங்கும் அலைந்து தேடுவான். மற்றவர்கள் வந்து கேட்டாலும் எரிந்து விழுவான். அதேபோல் பதவியை இழந்த காங்கிரஸ்காரர்கள் எரிந்து விழுகிறார்கள்.

அவர்கள் இழந்தது என்ன? நான்கு அணா காசா? அரசாட்சி அல்லவா? எங்களைப் பார்த்து “என்ன செய்தீர்கள்” எனக் கேட்டவர்களுக்கு ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

காந்தியாரின் கொள்கையான ரூ.500க்கு அதிகமாகச் சம்பளம் வாங்க்ககூடாது என“ற திட்டத்தை நாங்கள் தானே பின்பற்றுகிறோம்? இது பெரிய விஷயம் இல்லாவிட்டாலும் மக்களோடு நாங்களும் வாழ்கிறோம் என்பதைக் கூறுகிறோம்.

“தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்று தமிழில் பெயர்ப் பலகை போட்டு இருக்கிறோம். இது என்ன பிரமாதம் என்கிறார் பக்தவத்சலம், பிரமாதம் இல்லை. சிறிய விஷயம் தான். இந்தச் சிறிய விஷயத்தைக்கூட உங்களால் செய்யமுடியவில்லை?

தர்மபுரி மாவட்டத்தில் எட்டு லட்சத்து அறுபது ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலத்திற்கு வரி விலக்கு அளிதிருக்கிறது.

சென்னையிலும் கோவையிலும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுகிறோம். இதைப் பார்த்துவிட்டு காங்கிரசார் “சென்னையில் தானே ஒரு படி அரிசி? கோவில்பட்டிக்கு எங்கே?” என்று கேட்கிறார்கள். நான் கூறுகிறேன். நீங்கள் செய்ததைவிட நாங்கள் இந்தக் காரியத்தைத் தொடர்ந்து அமல் நடத்துவோம். ஒரு ஆண்டில் கூட அல்ல, சில மாதத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம்.

இந்த ஆண்டு அறுவடை நன்றாக இருக்கும் என்று நான் கூறியதற்கு சி.சுப்பிரமணியம் “அண்ணாதுரை மந்திரம் போட்டா உற்பத்தி செய்துவிட்டார்” என்கிறார்.

எனக்கு மந்திரம் தெரிந்திருந்தால் 1967 க்குப் பிறகு தானா உபயோகித்து இருக்கவேண்டும். நாங்கள் மணி முத்தாறு அணையைக் கட்டினோம் என்கிறீர்கள். சுப்பிரமணியம் செங்கல் சுமந்தாரா? பக்தவத்சலம் சாந்து குழைத்தாரா? நீங்கள் திட்டம் போட்டுக் கொடுத்தீர்கள். தொழிலாளர்கள் சிறப்பாகக் கட்டினார்கள்.

இதே போலத்தான் நாங்களும் நல்லதாக விதை, உரம் ஆகியவற்றைக் கொடுத்தோம். விவசாயிகள் நன்றாக உற்பத்தியைப் பெருக்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத் தனமாகப் பேசுவதா?

ஐந்து மாத காலத்தில் என்ன சாதித்தார்கள் என்று கேட்கிறார்கள். மைசூரில் காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. அவர்கள் சாதித்ததைவிட நாங்கள் அதிகமாகச் செய்திருக்கிறோம்.

ஆந்திரா, மகாராஷ்டிராவை எடுத்து நமது அரசுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் ஏன்? டெல்லியிலும் காங்கிரஸ் ஆட்சி தானே? அவர்கள் செய்ததையும் தி.மு.கழக அரசு செய்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ளலாமே!

முன்னால் நமக்கிருந்த நிலைமை வேறு, இப்போதுள்ள பொறுப்புகள் வேறு. இன்னின்னது ஏன் செய்யவில்லை என்று அன்றிருந்த ஆட்சியாளரைப் பார்த்துக் கேட்பதில் அப்போது நமது கடமை அடங்கியிருந்தது. இப்போது இன்னின்னது செய்யப்பட வேண்டுமென்று நாமே சிந“தித்துத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியுள்ளது.

முற்றிய கதிரின் உணர்ச்சி

கதிர் முற்றாத நிலையில், பயிர், காற்றடித்த பக்கமெல்லாம் ஆடுவதைப் பார்க்கலாம். கதிர் முற்றிய நிலையில் நெற்பயிர் வயலில் படுத்தபடி இருக்கும். முற்றிய கதிரின் அடக்க உணர்ச்சியை நாம் பெறவேண்டும்.

கழக ஆரம்ப காலத்திலிருந்தே இதை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அவ்வழி கழகத் தோழர்கள் நடந்து வந்ததால் தான் நாம் இன்றைய நிலையை எட்டினோம். “பொறுத்தவர் பூமி ஆள்வார்” என்று பெரியவர்கள் சொல்வதில்லையா? பூமியை ஆளாவிட்டாலும் தமிழ் நாட்டையாகிலும் ஆளுகிற நிலையில் இருக்கிறோம்.

ஆம்! பொறுத்தோம்! எதையெதை யெல்லாம் பொறுத்துக் கொண்டோம் என்பதை எண்ணும்போது மன வேதனை மேலிடுகிறது.

இப்போதும் ஏசுகிறார்கள். தாங்கிக் கொள்வோம், அந்த ஏசல்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இதையும் தாங்கிக் கொள்வோமானால் இன்று இருப்பதைவிட நேர்த்தியான நிலையை நாம் அடைவோம்.

அவர்கள் எதைச் செய்தாலும் திருப்பிச் செய்வது என்பதானால் அதற்கும் பத்துநாள் போதும். ஏன் பதினெட்டு நிமிடம் போதும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது.

காங்கிரசார் இருந்ததை இழந்தவர்கள், நாம் இல்லாததைப் பெற்றவர்கள். அவர்கள் ஆத்திரப்படுவார்கள்.

காங்கிரஸ்காரர்கள் இப்படி வீணே தூற்றிக் கொண்டிருப்பதை விட்டு வேறு பயனுள்ள காரியத்தில் கவனம் செலுத்தினால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

கிராமத்து டீக்கடைக்காரர் ஒரே ரிக்கார்டைத் திரும்பத் திரும்பப் போட்டால் வழியில் போகிறவர்கூட கேட்பார், “ஏனய்யா? வேறு பிளேட் இல்லையா? மாற்றிப் போடேன்!” என்று.

அதுபோல் இவர்கள் (காங்கிரஸ்) தங்களது பிரச்சார முறையையாவது மாற்றிக் கொள்ளட்டும்.

அரசு இன்னின்னது செய்ய வேண்டுமென்று அவர்கள் எடுத்துக் கூறட்டும். பொறுப்புள்ள கட்சிக்குரிய தகுதியை அப்போதுதான் அது பெறும்.

இவர்கள் தூற்றத் தூற்றத்தான் என்நிலை உயர்கிறது. பல லட்சக்கணக்கானவர் வீடுகளில் அண்ணன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை அறிந்திருந்தும் தெளிவில்லையே. இந்தக் காங்கிரசாருக்கு? இதை எண்ணினால் வருத்தமாக இருக்கிறது.

பதவி போய்விட்டால் இயற்கை அறிவுத் தெளிவையுமா இவர்கள் இழந்துவிட வேண்டும்?

பதவி போய்விட்ட ஆத்திரத்தில் பேசுகிறார்கள். நாம் அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. கேள்வி கேட்கிறார்கள் கேட்கட்டும்-இத்தனை காலம் நாம் கேட்டு அவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் நம்மைக் கேட்கிறார்கள். இந்த நிலைமை வர நாம் எத்தனை நாள் தவமிருந்தோம்?

நாம் செய்ய வேண்டியது நிறைய உண்டு. ஆங்காங்குள்ள கழகத் தோழர்கள் சிறு கொட்டகைகளில் கூடி இதுவரை செய்தது இனிச் செய்யவேண்டியது ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும்.

இதுவரை நாம் செய்ததென்ன என்பதைப் பாருங்கள். சம்பளத்தை 500 ஆகக் குறைத்துக் கொண்டோம்-இது என்ன பிரமாதமா? என்கிறார்கள்.

காந்தியார் வாக்கை காங்கிரசார் காக்கத் தவறினாலும் நாமாவது காப்போம் என்றுதான் குறைத்துக் கொண்டோம்.

பஸ் கட்டணத்தைக் குறைத்தோம். ஒரு போகம் பயிரான நிலங்களில் இரு போகம் பயிராக வகை செய்கிறோம்.

நம்முடைய நாடு தமிழ்நாடு, இதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இந்தப் பெயர் கிடையாது. தமிழ்நாடு என்று பெயரிட்டு, அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும் என்று நான் செல்வராஜ் ஆகியோர் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் சொன்னோம்.

நாம் இப்போது வந்ததும் அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். ஓசைப்படாமல் நிறைவேற்றினோம்.

தமிழில் எழுதும்போது தமிழ்நாடு என்றும், ஆங்கிலத்தில் எழுதும்போது “மதராஸ்” என்றும் வைத்துக்கொல்ளலாம் என்று அவர்களுக்கு இப்போது தலைவராக இருக்கும் கருத்திருமன் கூறினார். அத்தகைய இரண்டும் கெட்ட நிலை வேண்டாம் என்று நான் சொன்னேன். வேண்டாமென்றால் விட்டுவிடுங்கள் என்று அவர் சொல்லிவிட்டார்.

இதுவரை சட்ட சம்மதம் பெறாமல் விவாதத்துக்குரியதாக இருந்த சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்க அதாவது யாருக்கு அத்தகைய திருமண முறையில் விருப்பமிருந்து செய்துகொள்கிறார்களோ, அவர்களது திருமணம் செல்லும் என்று சட்டம் கொண்டு வந்தோம்.

மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைப் போட்டு இருபதாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து போதாதென்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிபோட்டு அதையும் செலவழித்தார்கள். அதற்குப்பிறகும் அவர்களாலே விவசாயத்தைச் செழிப்பு அடையச் செய்ய முடியவில்லை.

போன வருடம் மழை இல்லை. அதற்குமுன் வருடமும் மழை இல்லை. அண்ணாதுரை வந்த உடனே மழை பெய்து விட்டது. அதனாலே விவசாயம் செழிப்பு அடைந்து விட்டது என்று மேலே கையைக் காட்டுகிறார்கள். அதற்கு ஒரு நண்பர் சொன்னார். ‘மேலே இருப்பவனுக்குக் கூட காங்கிரஸைப் பிடிக்கவில்லை. அண்ணாதுரையைப் பிடிக்கிறது. அதற்கு என்ன செ“யவது? என்று.
இருபது வருடங்களாகவா மழை பெய்யவில்லை?

இருபது வருட காலத்தில் இவர்கள் விவசாயத்தைப் பலப்படுத்தவில்லை. ஆறுமாத காலத்தில் நாங்கள் உணவு நிலைமையை ஓரளவு சீர்படுத்தி இருக்கிறோம். பத்து மூட்டை கிடைத்த இடத்தில், முப்பது மூட்டை விளையச் செய்து இருக்கிறோம். விவசாயிகள் கேட்ட அளவிற்கு உரம் கிடைக்கச் செய்து இருக்கிறோம். இந்த வருஷம் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததைப் போல எந்த வருஷமும் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை என்று விவசாயிகள் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஆண்டு உணவுப் பஞ்சம் இல்லை என்ற நிலையை ஆறுமாதத்தில் நாங்கள் செய்து இருக்கிறோம்.

விவசாயம் வளர்ச்சியடையாமல் தொழில் வளம் பெற முடியாது. அப்படிச் செய்தால் அட்டையிலே வீடு கட்டி ஆடிக் காற்றிலே அடித்துச் செல்வது போலத்தான்.

அவர்கள் ஆரம்பித்த ஒவ்வொரு தொழிலும் நஷ்டத்தில் இருக்கிறதே தவிர லாபத்திலே இல்லை. ஊர் மக்கள் பணத்தை வரியாக வாங்கி இந்த நிலைமையில் கொண்டு வைத்திருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதத்தில் என்னென்ன காரணங்களுக்காக காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொன்னோமோ அவைகளிலே ஒன்றுகூட இன்று குறையவில்லை. ஒருவர் உங்களைக் கன்னத்தில் ஓங்கி அறைகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கன்னம் வீங்கிவிடுகிறது. வீட்டுக்குப் போகிறீர்கள். வீட்டிலே கன்னத்தில் தடவ மஞ்சள் அறைக்கிறார்கள். கன்னத்தில் அறைந்தவர் அங்கே வந்து ‘எதற்காக மஞ்சள்? இன்றொரு கன்னத்தில் அறைகிறேன், அதுவும் வீங்கினால், இரண்டும் சரியாகிவிடும்?’ என்று சொல்கிறார்.

அதைப்போல காங்கிரஸ்காரர்கள் 67 பிப்ரவரி வரை ஓங்கி அறைந்தார்கள். நான் ஒரு கன்னத்துக்குத் தடவலாம் என்று மஞ்சள் அறைகிறேன். அதற்குள் காங்கிரஸ்காரர்கள் இன்னொரு கன்னத்தில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் சொல்கிறார்கள்.

படியரிசி போட்டால் ‘இது என்ன பிரமாதம்?’ கூவம் நதி நாற்றத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றால் இது என்ன பிரமாதம்? காவிரித் தண்ணீரைச் சென்னைக்குக் கொண்டு வருகிறோம் என்றால் இது என்ன பிரமாதம்? எது பிரமாதம் என்கிறார்கள். பதவி நாற்காலியில் அவர்கள் அமர்ந்தால் தான் பிரமாதம் என்று சொல்கிறார்களா?

ஓவியன் எதிரில் திரைச்சீலை இருக்கும். கையிலே தூரிகை இருக்கும். கீழே பலவிதமான வண்ணக் குழம்புகள் இருக்கும். தூரிகையை வண்ணத்திலே துவைத்து திரைச்சீலையிலே கோடிட்டால் மான் வேண்டுமென்றால் மான்வரும். மயில் வேண்டுமென்றால் மயில் வரும், மலை வேண்டுமானால் மலை வரும். இது ஒரு பிரமாதமா என்று சொல்லிக்கொண்டு நாமும் எடுத்துத் தடவினால் நமது உடையிலேதான் வண்ணங்கள் ஒட்டும்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எத்தனை முறை தீப்பிடித்தது? ஒரு வீட்டுக்கு 40 ரூபாய் கொடுத்தார்கள். நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபிறகு அதை இரட்டிப்பாக்கி எண்பது ரூபாய் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டேன். இது ஒரு பிரமாதமா என்று கேட்கிறார்கள்.

தீப்பிடிக்காத வீடுகள் கட்ட நான் பணம் கேட்டேன். இதுவரை 31 லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள்.

நிர்வாகத்துக்கு நாங்கள் புதியவர்கள். எத்தனையோ தொல்லைகளும் சிக்கலும் மிகுந்ததாக நிர்வாகம் இருந்தது.

என்னுடைய அமைச்சரவை நண்பர்கள் நிர்வாகத்துக்குப் புதியவர்கள் என்றாலும் அவர்களுக்குப் பாரம்பரியம் உண்டு. தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளைத் தங்களது கடின உழைப்பின் மூலம் செம்மையுற முடித்து, வெற்றி பல கண்டவர்களே அவர்கள். தமிழ் மக்களின் நல்லெண்ணம் என்ற துணையோடு ஆட்சிப் பொறுப்பினை நாங்கள் ஏற்றோம்.
அதிகாரிகளோடு எங்களுக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு விசித்திரமாக இருந்தது. அன்பைக் காட்டிலும் அச்சமே மேலிட்டு நின்றது.

20 ஆண்டுகள் ஒரே கட்சியுடன் பழகியதால் அதிகாரிகளிடம் பதிந்துவிட்ட மனோபாவ நிலைகளிலிருந்து அவர்களை மீளச் செய்வது சாத்தியம் தானா என எண்ணினோம்-இதில் நாங்கள் வெற்றி கண்டோம். காரணம் நாங்கள் அவர்களது உள்ளங்களை வேண்டினோம்.

அளவிட முடியாத அதிமுக்கிய உதவியைப் பெற்றோம்.

நாட்டின் நிர்வாகத்தை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதோடு புதியவர்களுக்கு வழிகாட்டவும் வல்லவர்கள் நம் அதிகாரிகள்.

சமுதாயத்தின் ஒவ்வொரு தரப்பாருடைய நன்மையும் அவரவர்களது மகிழ்ச்சியுமே எங்கள் குறிக்கோள். இப்படி ஒவ்வொரு பகுதியினரும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதன் மூலம் சமூக முழுமையும் மகிழ்ச்சியுடன் இருக்க வழிகோல வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். இந்தக் குறிக்கோளை நோக்கிப் பணியாற்றுவதில் இதுவரை நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்.

எல்லாருக்கும் நண்பன்-எவருக்கும் விரோதியல்ல இப்படித“தான் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.

அமைச்சரவையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்களுக்குப் பணி செய்வோம். மக்கள் பணியென்பது எங்களது வாழ்க்கை லட்சியம்.

எனக்கெனச் சிறிது நேரம் தேடிக்கொண்டு “பார்ன்ப்ரீ” என்ற ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன்.

சிங்குக்குட்டி ஒன்றைக் காட்டிலிருந்து எடுத்து வந்து வளர்க்கிறார்கள். அந்தப் பெண் சிங்கம் அதன் இயற்கைக் குணங்களை இழந்து மனிதர்களைப் போல் பழகுகிறது.

அதனை அதற்கே உரிய சூழ்நிலையில் வாழச் செய்வதற்காகக “காட்டிலே கொண்டு போய் விடுகிறார்கள். ஆண் சிங்கம் ஒன்று இதனோடு பழக மறுத்துத் தனக்கென்றுள்ள தன் பழைய துணையோடு போய்விடுகிறது. பின்னர் எப்படியோ ஒரு வழியாகச் சிங்கம் ஒன்றின் குகையை இப்பெண் சிங்கம் அடைகிறது.